செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மாவீரர் துயிலும் இல்ல காணியை ராணுவத்தினரின் துணையுடன் அபகரிப்பு!

மாவீரர் துயிலும் இல்ல காணியை ராணுவத்தினரின் துணையுடன் அபகரிப்பு!

1 minutes read
கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியின் ஒரு பகுதியை இராணுவத்தினரின் துணையுடன் தனிநபர் ஒருவர் அடாத்தாக அபகரிப்பு செய்துவருகிறார் என தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினர் தெரிவிக்கின்றன.
எவ்வித அனுமதிகளை பெறாமலும் ஆவணங்கள் இல்லாமலும் ராணுவத்தினரின் ஆளுகைக்குள் உள்ள பகுதியை தனிநபர் ஒருவர் ராணுவத்தினரின் துணையில்லாது எவ்வாறு அபகரிக்க முடியும்.
குறித்த பகுதியை கனரக வாகனம்(ஜேசிபி) கொண்டு சுத்தப்படுத்தி வீடு அமைக்கும் பணியில் குறித்த நபர் ஈடுபட்டு வருகிறார். அவர் சுத்தம் செய்ய பயன்படுத்திய கனரக வாகனம் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ முகாமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாது அபகரிக்கும்  பகுதி போரில் வீரமரணமடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களை விதைக்கப்பட்ட பகுதி இவற்றைக் கருத்தில் கொண்டு பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் இதற்கு தீர்க்கமான முடிவினை தருமாறு பணிக்குழு நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
குறித்த விடயம் தொடர்பாக தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு நிர்வாகத்தினர் இராணுவ முகாமுக்கு சென்று குறித்த சம்பவம் தொடர்பாக வினவிய பொழுது ராணுவத்தினர் தமக்கும் குறித்த அபகரிப்பு இருக்கும் தொடர்பில்லை எனவும் இதனை பிரதேச செயலாளர் ஊடாக அணுகுமாறு தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.