செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு மன்னர் சார்லஸின் மரணச் செய்தியை தவறுதலாக ஒலிபரப்பிய வானொலி நிலையம்

மன்னர் சார்லஸின் மரணச் செய்தியை தவறுதலாக ஒலிபரப்பிய வானொலி நிலையம்

0 minutes read

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் (King Charles III) உயிரிழந்ததாக தவறுதலாக அறிவித்த வானொலி நிலையம் பின்னர் அதற்காக மன்னிப்புக் கோரியுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த Radio Caroline வானொலி நிலையம், கணினி கோளாறு காரணமாக இந்தத் தவறான அறிவிப்பு வெளியானதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த வானொலி நிலையத்தின் நிர்வாகி பீட்டர் மூர் (Peter Moore) கூறுகையில், அரச குடும்ப உறுப்பினர் ஒருவர் மரணமடைந்தால் பின்பற்ற வேண்டிய அவசர நடைமுறைகள் இங்கிலாந்திலுள்ள அனைத்து வானொலி நிலையங்களிலும் முன்கூட்டியே தயார் நிலையில் இருக்கும் என்றார்.

அந்த நடைமுறையே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தவறுதலாக செயல்படுத்தப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்தார்.

மேலும், மன்னரிடமும் அந்தச் செய்தியை கேட்ட பொதுமக்களிடமும் அவர் வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

அதேவேளை, இன்னும் பல ஆண்டுகள் மன்னரின் கிறிஸ்துமஸ் உரையை ஒலிபரப்ப விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.