Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் ஜனனம் | கவிதை | பத்மநாபன் மகாலிங்கம்

ஜனனம் | கவிதை | பத்மநாபன் மகாலிங்கம்

0 minutes read

தந்தை மனம் விரும்பத்
தாயும் உவந்து ஏற்க
பத்து மாதங்களின் பின்
நிகழ்ந்தது அந்த ஜனனம்

இன்னும் சில காலம் உல்லாசமாய்
இருப்போம் என்று இருவரும்
சந்தோசமாயிருக்க எதிர்பாராது
ஏற்படும் ஒரு ஐனனம்

கோவில் குளம் எல்லாம் அலைந்து
விரதங்கள் பல இருந்து
குலசாமியிடம் நேர்த்தி வைத்து
நடப்பது சில ஜனனம்

வைத்தியர்கள் பலர் மாறி
செய்யாத வைத்தியம் செய்து
உடற்குறை சரியாக்கி
நேர்ந்தது அந்த ஜனனம்

உயிர் அணு எடுத்து
கருவுடன் கலந்து வைத்து
வைத்தியரின் திறமையால்
கிடைக்கும் நவீன ஜனனம்

ஜனனம் எவ்விதம் ஆனாலும்
பெண் பூவாய் பிறந்தாலும்
ஆண் மகவாய் மலர்ந்தாலும்
பூமித் தாய் மனம் மகிழ்ந்திடுவாள்

 

– பத்மநாபன் மகாலிங்கம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More