March 26, 2023 11:05 pm

வெண்பனித் தேசம் நோர்வே | பா.உதயன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆகாயம் அழகாய் அந்தியில் தூவுது
வெண்பனி எங்கும் வீதியில் பூக்குது
ஆயிரம் பறவை பாடுத்தோர் கவிதை
அழகிய மலர் ஒன்று விரிகிறது

அருகினில் மழை வந்து சிரிக்கிறது
அங்கங்கே பனித்துளி பொழிகிறது
வெண்மையாய் காலை விடிகிறது
அந்த மல்லிகைப் பூக்கள் போல் பூக்கிறது

வெள்ளைத் தேவதைகள் வீதி எங்கும் நடனம்
வெண் பனியாக மெல்லிய தூறல்
பூவினில் துளியாய் எழுதுதோர் கவிதை
வந்திருந்தோர் குயில் கூவுது காலை

அழகிய காலையில் பனி மழை பொழியுது
ஆயிரம் வெண்புறா சிரிப்பொலி கேட்குது
காதலின் மொழியினில் சலங்கைள் பாடவே
கனவினில் என் மனம் கவிதைகள் வரையுது

பனி விழும் மலைகளும் நதி சொல்லும் கதைகளும்
அழகிய முலைகளாய் அது பெரும் அழகு
காலங்கள் எழுதும் ஒரு கவிதையின் தொடர்களாய்
வெண் முகில் கூந்தலாய் வட துருவப் பெண் இவள் நடனமாய்

அருகினில் வந்து எனை எழுப்புதோர் தென்றல்
சல சல வென்றொரு மழைத்துளி தூவுது
கடும் குழிரோடொரு காலையும் விடியுது
எங்கிருந்தோ ஒரு இசை மழை பொழியுது
வட துருவ வெண்நிலவு வா என்று அழைக்குதெனை.

பா.உதயன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்