செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் எலிக் காய்ச்சலிலிருந்து எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது?

எலிக் காய்ச்சலிலிருந்து எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது?

1 minutes read

மழைக்காலம் தொடங்கியவுடன் வெள்ளப்பெருக்கால் பாதிக்கும் பகுதிகளில் பல்வேறு நோய்கள் பரவுகின்றன. இதில் மிக ஆபத்தான மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய நோயாக எலிக் காய்ச்சல் (Leptospirosis) கருதப்படுகிறது.

வெள்ளநீரில் கலந்த எலிகளின் மூத்திரம் காரணமாக இந்த நோய் மனிதர்களுக்கு பரவ முடியும். குறிப்பாக வெளியில் நீர் நிரம்பிய பகுதிகளில் வேலை செய்யும் மக்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு.

யார் யார் அதிக ஆபத்தில் உள்ளவர்கள்?

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள்

வெள்ளநீரில் நடந்து செல்லும் தொழிலாளர்கள்

மீட்பு பணியாளர்கள்

வெளிநிலப் பணிகள், விவசாயம், கால்நடை பராமரிப்பு போன்ற பணியாற்றுபவர்கள்

எலிக் காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள்

கடுமையான தலைவலி

கண் சிவத்தல்

உடல் வலி, கூட்டு வலி

களைப்பு மற்றும் சோர்வு

குமட்டல், வாந்தி

சில நேரங்களில் மஞ்சள் காமாலை (ஜாண்டிஸ்)

தீவிரமான நிலையில் சிறுநீரக மற்றும் கல்லீரல் கோளாறு

அறிகுறிகள் இருப்பின் அல்லது சந்தேகம் இருந்தாலும் உடனே அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்!

எவ்வாறு தங்களை பாதுகாப்பது?

1. வெள்ளநீரை தவிர்க்கவும்

முடிந்தவரை வெள்ளநீரில் நடப்பதை தவிர்க்க வேண்டும்.

கட்டாயம் செல்ல வேண்டிய சூழலில் ரப்பர் கால்சட்டை (Boots) மற்றும் கையுறைகள் அணிய வேண்டும்.

2. காயம் உள்ளவர்கள் கவனம்

உடலில் சிறிய காயம் இருந்தாலும் வெள்ளநீரில் நின்றால் நோய் பரவ வாய்ப்பு அதிகம்.

காயத்தை நன்றாக கவர் செய்ய வேண்டும்.

3. குடிநீரை பாதுகாப்பாக பயன்படுத்தவும்

கொதிக்கவைத்த நீரை மட்டுமே குடிக்க வேண்டும்.

மாசான நீரைத் தவிர்க்கவும்.

4. வீடுகளில் எலிகள் நுழையாதபடி பாதுகாத்தல்

உணவுப்பொருட்களை மூடி வைக்கவும்

எலிகள் வரும் இடங்களை மூடுதல்

குப்பைகளை சரியாக அகற்றுதல்

முக்கிய முன்னெச்சரிக்கை மருந்து

வெள்ளநீரில் அடிக்கடி ஈடுபட வேண்டியவர்கள், மருத்துவ ஆலோசனைப்படி Doxycycline 200mg முன்னெச்சரிக்கை மருந்தை எடுத்துக்கொள்ளலாம்.
இது MOH/PHI அலுவலர்கள் மூலம் இலவசமாக வழங்கப்படும்.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

வெள்ளநீரில் நின்ற உடனோ

மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதேனும் இருந்தாலோ

உடல் நிலை திடீர் மோசமடைந்தாலோ உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும்.

மழை மற்றும் வெள்ள காலங்களில் எலிக் காய்ச்சல் மிக வேகமாக பரவக்கூடிய ஆபத்தான நோயாகும். சில எளிய முன்னெச்சரிக்கை வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்த நோயிலிருந்து தங்களை மற்றும் உங்கள் குடும்பத்தை காப்பாற்றலாம். வெள்ளத்தில் ஈடுபட வேண்டிய நிலையில் இருந்தால் பாதுகாப்பு சாதனங்கள் அணிதல், சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுதல் மிக அவசியம்.

உங்கள் பாதுகாப்பு, உங்கள் பொறுப்பு!
எச்சரிக்கையுடன் இருங்கள் – எலிக் காய்ச்சலைத் தடுப்போம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More