0
மோடி பிரதமராகப் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியா சார்பில் அழைப்பு அனுப்பப் பட்டுள்ளது. அதில், இலங்கை சார்பில் கலந்துகொள்ள ராஜபட்சவுக்கும் அழைப்பு அனுப்பப் பட்டது. இதற்காக மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார் இலங்கை அதிபர் ராஜபட்ச.
இது குறித்து தனது சமூக வலைத்தளமான டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ள ராஜபட்ச, தாம் இந்த நிகழ்ச்சியில் அவசியம் கலந்துகொள்ளவுள்ளதாகக் கூறியுள்ளார்.