கிரீஸ் நாட்டில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.இந்த நிலநடுகத்தால் வீடுகள் மற்றும் கட்டிங்கள் குலுங்கியது, இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி சாலைகளில் குவிந்தனர்.
ஏதென்ஸ் நகரின் வடக்கு பகுதியில் இருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.