லி ஓரெல் பாரிஸ் அமைப்பின் தூதுவராக உள்ள பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், கேன்ஸ் திரைப்பட விழாவின் 7ம் நாளில் சிவப்புக் கம்பள வரவேற்பு பெற்றார். ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த விலை உயர்ந்த கை வைக்காத கவுன் மாடல் உடை, அவரது சிவப்பு லிப்ஸ்டிக் மேக்கப், கண்களில் புருவத்துக்கு திருத்தமாக ஐ-லைன் செய்து கொண்டு அவர் சிவப்புக் கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்து வந்தது, அங்கிருந்த புகைப்படக் கலைஞர்களைப் பரவசப்படுத்தியது. வெளிநாட்டுப் புகைப்படக் கலைஞர்கள் ஐஸ்வர்யா ராய் பச்சனின் ஒய்யார நடையை தங்கள் கேமிராவுக்குள் சிறைப்படுத்திக் கொண்டனர்.
அவர் மே 21ம் தேதி இன்றும் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்புக் கம்பளத்தில் நடந்து செல்கிறார். 13வது சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழா பலரது கவனத்தையும் இப்போது ஈர்த்து வருகிறது.