தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மட்டக்களப்பில் உரையாற்றிக் கொண்டிருந்த போது மயக்கமடைந்தார்.
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள துளசி மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடாத்திய அரசியல் கருத்தரங்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜ உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது மயக்கமுற்ற அவர் கீழே விழுவதற்கு முற்பட்டார். நிலைமையை உணர்ந்த கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் மேடைக்கு ஓடிச் சென்று அவரை தாங்கிப்பிடித்து மேடையில் படுக்க வைத்தனர். பின்னர் அவருக்கு நீர் அருந்தக் கொடுத்ததுடன், அவரின் முகத்தினை தன்னீரால் கழுவியபின்னர் மாவை சேனாதிராஜ எம்.பி. வழமை நிலைக்கு திரும்பினார்.