இந்தியா மேகாலயாவில், வீட்டுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் சிலர், 5 குழந்தைகள் மற்றும் கணவரை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு, பெண்ணை மட்டும் வெளியே இழுத்து வந்து, பலாத்காரம் செய்ய முயன்றனர்.
ஆனால், அப்பெண் பலாத்காரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பெண்ணின் தலையை தானியங்கி துப்பாக்கியால் சுட்டு இரண்டாக பிளந்து தங்களது காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், கரோ தேசிய விடுதலை முன்னணி என்ற பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.