0
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடைபெற்ற சர்வதேச மணற்சிற்பப் போட்டியில், இந்திய கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கிய மணற்சிற்பம், அதிக மக்களை கவர்ந்த சிற்பம் என்ற விருதை தட்டிச் சென்றுள்ளது. மரங்களை அழிவிலிருந்து பாதுகாத்து, எதிர்காலத்தை காப்போம் என்பதன் அடிப்படையிலான இந்த மணற்சிற்பப் போட்டியில், சர்வதேச விருதை முதல் இந்தியர் என்ற பெருமையை, சுதர்சன் பட்நாயக் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.