ஆஸ்திரேலியாவுக்குள் தஞ்சம் கேட்டு வரும் இலங்கை அகதிகளை அவர்களது நாட்டுக்குத் திருப்பி அனுப்ப ஆஸ்திரேலிய நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
அண்மையில் தங்கள் நாட்டுக்குள் நுழைய முயன்ற 41 இலங்கை அகதிகளை ஆஸ்திரேலியா திருப்பி அனுப்பிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அகதிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றம், இந்தத் தடையை விதித்தது. இதுகுறித்து அகதிகளின் வழக்குரைஞர் ஜார்ஜ் நியூஹவுஸ் கூறுகையில், “இலங்கையில் தாங்கள் துன்புறுத்தப்படுவதாகவும், அங்கு தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது எனவும் அகதிகள் கூறியுள்ளனர்.
இத்தகைய சூழலில் அவர்களைத் திருப்பி அனுப்புவது சட்ட விரோதமானது” என்று தெரிவித்தார்.