கடந்த சனிக்கிழமை மாலை லண்டன் தெற்குப்பகுதியான சேர்பிட்டனில் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் ஒன்றியம் தனது வருடாந்த ஒன்றுகூடலை செய்திருந்தது.
இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் மிகவும் பிரபலமான வரலாற்று முக்கியதுவமான இராமகிருஷ்ண மிசன் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் ஒன்றுகூடல் மேற்படி ஒன்றியத்தின் தலைவர் திரு முகுந்தகுமார் குமரகுரு தலைமையில் சிறப்புற நடைபெற்றது.
பாடல்கள், நடனம் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் சிறுவர்களுக்கு பிரத்தியேகமான பல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.









