சிங்கப்பூரைச் சேர்ந்த இந்திய தம்பதி, சப்பாத்தி செய்து தரும் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோ இன்னும் விற்பனைக்கு வராத நிலையில், அமெரிக்காவில் இதற்கு பயங்கர வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த ரிஷி இஸ்ரானி- பிரனோதி என்ற தம்பதியினர் சிங்கப்பூரில் வாழ்ந்து வருகின்றனர். இந்திய சமையலறைக்கு ஏற்புடையதாக ஒரு உபகரணத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்பது இவர்களின் கனவு. கடந்த 6 வருடங்களாக முயற்சி செய்து ‘ரோடிமேடிக்’ என்ற சப்பாத்தி செய்யும் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
சப்பாத்தியின் சுற்றளவு, தடிமம், மென்மை என அனைத்தையும் இந்த ரோபோவில் உள்ளிட்டு செய்துவிடலாம்.
இந்த ரோபோவை வடிவமைக்க இவர்கள் 6 வருடங்கள் உழைத்துள்ளனர். இவர்களது கண்டுபிடிப்புக்கு அமெரிக்க சான்று வழங்கப்பட்டுள்ளதால், இன்னும் சில மாதங்களில் அமெரிக்காவில் இந்த சப்பாத்தி செய்யும் ரோபோ விற்பனைக்கு வந்துவிடும்.