0
இயக்கச்சியில் வெடிகுண்டு தயாரிக்கும்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தங்கராசா தேவதாசன் (43) என்பவரே நேற்றிரவு (7) உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டம், இயக்கச்சி பதியிலுள்ள புளியடி சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றில் கடந்த 3ஆம் திகதி மாலை இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது.
குண்டு தயாரித்த தங்கராசா தேவதாசன் கை, கால், முகம் உள்ளிட்ட பகுதிகளில் எரிகாயங்களுடன் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.