மகளிர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து – தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இதில் நாணயச்சுழற்சியில் வென்ற தென் ஆபிரிக்க அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அதன்படி ஆடிய தென் ஆபிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ஓட்டங்கள் எடுத்தது.
அதிகபட்சமாக சி ட்ரையான் 88 ஓட்டங்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில் நடாலி ஸ்கிவர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இறுதியில் இங்கிலாந்து பெண்கள் அணி 32.1 ஓவரில் 219 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நாளை 15ஆம் திகதி நடைபெறவுள்ளது.
