Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் முழுமையாக ஒரு ஈழப் பொண்ணாய் உணர்ந்தேன் | சினம்கொள் நாயகி நர்வினி

முழுமையாக ஒரு ஈழப் பொண்ணாய் உணர்ந்தேன் | சினம்கொள் நாயகி நர்வினி

3 minutes read

சினம்கொள் படத்தில் நடித்தபோது, ஒரு ஈழப் பெண்ணாய் முழுமையாக உணர்ந்தேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் படத்தின் நாயகி நர்வினி டேரி. டென்மார்க் நாட்டில் புலம்பெயர்ந்து வசிக்கும் நர்வினி டேரி ஈழத்தை பூர்வீகமாக கொண்டவர். படங்களில் நடிப்பது மாத்திரமின்றி, பாடல்களை இயக்குவதிலும் ஆர்வம் கொண்டவர். கவிதைகள் கூட எழுதுவேன் என்று புன்னகைத்தபடி பேசினார்.

நர்வினி க்கான பட முடிவு

சினம்கொள் படத்தில் நடித்த அனுபவத்தை கூறுங்கள்?
“சினம்கொள் படத்தில் நடிச்சது என்னக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம் என்றுதான் சொல்வேன், என்னோட வாழ்க்கையிலே ஒரு மிக முக்கியமான அனுபவமாகத்தான் அதை நான் பார்க்கிறேன்.  90 நாள் அங்க இருந்தேன்.  ஷூட்டிங் நடந்தது. அந்த  ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அனுபவம் எனக்கு கிடைச்சது . நான் என்னை ஒரு ஈழத்து பெண்ணாக முழுமையாக உணர்ந்ததே அப்போதுதான். உண்மையாக ஈழத்து வாசம் எனக்குள் முழுமையாக வீசியதும் அந்த 90 நாட்களில் தான்.  அந்த கதை, களம், எல்லாமே  வார்த்தைகளால் சொல்ல முடியாத உணர்வுகளை ஏற்படுத்தியது.” என்றபடி நெகிழ்கிறார் நர்வினி.

2017இல் சினம்கொள் படத்தின் பணிகள் துவங்கியது. இந்தப் படத்தில் நடிப்பதற்கு கதாநாயகியை  இயக்குனர் ரஞ்சித் தேடிக் கொண்டிருந்தார். ஈழத்துப் பெண்ணாய் நடிக்க வேண்டும் என்ற தேடலில் ஈழத்துப் பெண்ணே நடித்திருக்கிறார். “இயக்குனர் ரஞ்சித்தின் இயக்கத்தில் நடித்ததும் ஒரு பாத யாத்திரை போனது போலவே இருந்தது. நிறைய விசங்களை கற்றுக்கொடுத்தார். ஒவ்வொரு காட்சியையும் ரஞ்சித்து ரசித்து எடுப்பார். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பின் உள்ள உணர்வுகளை சொல்லி, வசனங்களை பேசுவதற்கு ஒரு பாடமே சொல்லி கொடுப்பார். இந்த படத்தில் செய்த ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பையும் தாண்டி உணர்வும் கலந்தே இருக்கும். அவ்வாறு நடிக்க வேண்டும் என்றே நினைத்தேன் இயக்குனர் கதை சொல்லும்போதே..” என நிறைவோடு பேசுகின்றார்.

நர்வினி க்கான பட முடிவு

ஆண்டவன் கட்டளை படத்தில் இலங்கை தமிழர் கதாபாத்திரத்தில் நடித்த அரவிந் இந்தப் படத்தின் நாயகனாக நடித்துள்ளார். படத்திற்கு இந்திய இசையமைப்பாளர் ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். படத்தில் பாடல்கள், மற்றும் பின்னணி இசை என்பன அற்புதமாக வந்திருக்கிறது.

இதேவேளை படப்பிடிப்பு களத்தில் பெற்ற அனுபவங்கள் குறித்தும் நர்வினி எம்முடன் பகிர்ந்துகொள்கிறார். “வெயிலில் எனது சருமத்தில் அலர்ஜி ஏற்பட்டது, வெறும் காலில்  செம் மண்ணில் நடந்ததும், ஓடியதும் காயங்கள் தந்தது, இதை எல்லாம் தாண்டி எனக்கு முழுக்க முழுக்க அந்த வாழ்க்கையை பழகியது.. ஈழத்தின் கஷ்டங்களை இந்த படத்தில் நான்  நடிக்கவில்லை உணார்த்தேன். என் மூலம் மற்றவர்களுக்கு உணர வைக்க முயன்றேன்.. தீபச்செவனின் வசனங்கள் ஈர்த்தது.  ஒளிப்பதிவாளரின் காட்சி அமைப்பு என்னை இன்னும் சிறப்பாக நடிக்கத் தூண்டியது. துணை இயக்குனர்கள் எனக்கு உற்சாகம் தந்தனர். புரொடொக்ஷன் டீம் என்னை பிள்ளை போல் பார்த்து கொண்டது.  இந்த படத்தில் ஒரு குடும்பமாக தான் எல்லோரோடும் நம்பிக்கையோடு 90 நாள் ஈழத்திலே இருந்து இந்த படத்தை சாதித்து முடித்தோம்.  அங்கு வேலை செய்த எல்லாருமே ஒரு தவம் போலவே இந்த படத்திற்கு வேலை செய்தார்கள். இந்த படத்தில் நடிச்சது என் வாழ்வில்  கிடைச்ச மிக பெரிய பாடமும்  அனுபவமுமாகும்…” என்றபடி மெய் சிலிர்க்கிறார்.

narvini-dery க்கான பட முடிவு

டென்மார்க் மிஸ் யூனிவெர்ஸ் போட்டியில் எல்லாம் கலந்து கொண்டிருக்கிறீர்கள். அடுத்து என்னென்ன முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்றும் நர்வினியிடம் கேட்டோம். “தற்போது மிஸ் யூனிவெர்ஸ் டென்மார்க் என்ற போடியில்  கலந்து அங்கு சிறந்த சரிடி அம்பாசடர்  என்ற பட்டத்தை பெற்றேன். அந்த போட்டி கடந்த சில மாதங்களாக நடந்தது. அதற்காக எல்லா வேலைகளையும் நிறுத்தி வைத்திருந்தேன். இப்பொழுது மறுபடியும் படங்களின் கதைகள் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஒரு காணொளி பாடல் செய்து முடிந்து, அது வெளீயிடுக்கு காத்திருக்கிறது. எந்தவொரு வேலையிலும் நமது தரத்தை உயர்த்தி கொண்டே போக வேண்டும். அந்த வகையில் என்னக்கு சவாலாக, அதேநேரம் தரமான படைப்புகளை  செய்யும் வேலைளைகளில் ஈடுபட்டிருக்கின்றேன்..” என்று உற்சாகம் குறையால் பேசுகிறார் சினம்கொள் நாயகி.
வணக்கம் லண்டனுக்காக தீபன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More