Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் மின்சார பற்றாக்குறை |பங்களாதேஷ் பாடசாலைகள் பூட்டு

மின்சார பற்றாக்குறை |பங்களாதேஷ் பாடசாலைகள் பூட்டு

1 minutes read

மின்சார பற்றாக்குறையால் பங்களாதேஷ் பாடசாலைகளுக்கு மேலும் ஒருநாள் பூட்டு

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள மின்சார பற்றாக்குறையை குறைப்பதற்கு பாடசாலைகள் வாரத்தில் மேலும் ஒருநாள் மூடப்படுவதோடு அலுவலக நேரமும் குறைக்கப்பட்டுள்ளது என்று அரச அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேஷில் கடந்த மாதம் தொடக்கம் தினசரி இரண்டு மணி நேரம் மின் வெட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு பெற்றோல் விலையை 50 வீதத்துக்கு மேல் அதிகரித்ததை அடுத்து அண்மைய வாரங்களில் நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.

உக்ரைன் போரினால் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு அதிகரித்திருப்பதோடு பங்களாதேஷ் பொருளாதாரம் மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்நிலையில் முன்னர் வெள்ளிக்கிழமை மாத்திரம் மூடப்பட்ட பாடசாலைகள் தற்போது சனிக்கிழமையும் மூடப்படும் என்று பங்களாதேஷ் அமைச்சரவை செயலாளர் கன்ட்கர் அன்வாருல் இஸ்லாம் கடந்த திங்கட்கிழமை குறிப்பிட்டார். சாதாரண நாட்களில் பங்களாதேஷில் பாடசாலைகள் ஆறு நாட்கள் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் அரச அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் எட்டு மணி நேரத்திற்கு பதில் எழு மணிநேரமே திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More