அவுஸ்திரேலியாவின் தலைநகர் வியன்னாவிற்கு அருகே மோட்லிங் நகரில் உள்ள பிரபல வைத்தியசாலையில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
வைத்தியசாலையின் 3ஆவது தளத்தில் பிடித்த தீ, கட்டிடம் முழுவதும் பரவியது. தீ விபத்தை தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த 90க்கும் மேற்பட்ட நோயாளிகளை பத்திரமாக வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பரவிய தீயை போராடி கட்டுப்படுத்தினர்.
எனினும், இந்த தீ விபத்தில் 3 நோயாளிகள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பெண் ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.