இந்தியாவின் வெப்பநிலை தாக்கம் . இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலையால் நாளுக்கு நாள் மரணிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
அனல் அலை தாக்கத்தால் மாத்திரம் 100க்கும் அதிகமானவர் மரணித்துள்ளனர் என்பது இந்தியாவின் அரசு ரீதியான தரவு ஆகும் .
இதை தவிர்த்து குறிப்பிட்ட சில காலங்களுக்குள் வரட்சி, வெள்ளம் என்பவை ஏற்பட அதிகமான வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது. வரக்கூடிய நாட்கள் என்பது கருத்தில் கொள்ளவேண்டிய நாட்களாக உள்ளது.
பசுபிக் பெருக்கடலில் ஏற்பட உள்ள மாற்றமே இந்திய நாடுகளை பெரிதும் மாற்றங்களுக்கு உட்படுத்தும். எல்நினோ தாக்கத்தின் விளைவு கடுமையான இயற்கை தாக்கங்களை உருவாக்க உள்ளது. எனவும் அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பலர் கருத்தாக உள்ளது.