புகைப்படத் தொகுப்பு

Home உலகம் மதுபானம் அருந்திய ஏர் இந்தியா விமானி குறித்த விசாரணைக்கு கனடா உத்தரவு!

மதுபானம் அருந்திய ஏர் இந்தியா விமானி குறித்த விசாரணைக்கு கனடா உத்தரவு!

0 minutes read

ஏர் இந்தியாவின் விமானி ஒருவர், மதுபானம் அருந்திய நிலையில் அவர் பணிக்கு அனுமதிக்கப்படாதமை தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் கடந்த மாதம் 23ஆம் திகதி கனடா – வான்கூவர் விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் புதுடில்லிக்குப் புறப்படுவதற்கு முன்னதாக இடம்பெற்றுள்ளது.

வான்கூவர் விமான நிலையத்தில் காவல்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் விமானி மதுபானம் அருந்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்போது, அந்த விமானியை பணியில் தொடர விட முடியாது என்று அதிகாரிகள் கூறினர். ஏர் இந்தியா நிறுவனம் விமானியை பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளதாகவும், அவரிடம் எதிர்காலத்தில் ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், கனடா போக்குவரத்து ஆணையம் இந்தச் சம்பவத்தை தற்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளதுடன், இதனை கடுமையாகக் கவனிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.