செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்க ஏர் இந்தியா தயாராகிறது!

புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்க ஏர் இந்தியா தயாராகிறது!

1 minutes read

ஏர் இந்தியா (Air India) நிறுவனம் புதிய தலைமை நிர்வாக அதிகாரியைத் தேடும் பணியை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜூன் மாதம் ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், 260 பேர் உயிரிழந்தனர். கடந்த பத்து ஆண்டுகளில் உலகளவில் பதிவான மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்றாக இந்தச் சம்பவம் கருதப்படுகிறது.

இந்த விபத்துக்குப் பின்னர் ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவசரகாலங்களில் பயன்படுத்த வேண்டிய முக்கிய கருவிகள் இல்லாமலேயே சில விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், பழுதடைந்த விமான பாகங்களைச் சீரமைப்பதில் தேவையற்ற தாமதம் ஏற்படுவதாகவும், விமான ஊழியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை நிர்வகிப்பதில் குறைபாடுகள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது கேம்பல் வில்சன் (Campbell Wilson) ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் முடிவடைய உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே புதிய தலைமை நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பிடத்தக்கது என்னவெனில், ஏர் இந்தியா நிறுவனத்தின் 25 சதவீத பங்குகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) நிறுவனத்தின் வசம் உள்ளது. இந்த சூழ்நிலையில் புதிய தலைமையால் நிறுவனத்தின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் மேம்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.