செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் லிங்கன் ஏரியில் காணாமல் போன 15 வயது சிறுவன் சடலமாக மீட்பு

லிங்கன் ஏரியில் காணாமல் போன 15 வயது சிறுவன் சடலமாக மீட்பு

1 minutes read

இங்கிலாந்தின் லிங்கன் (Lincoln) நகரில் உள்ள ஸ்வான்ஹோல்ம் ஏரியில் (Swanholme Lakes) ஞாயிற்றுக்கிழமை (24) நீந்தச் சென்ற 15 வயது சிறுவன் டெக்லன் சாப்யர் (Declan Sawyer), நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 14:30 மணியளவில், அந்த சிறுவன் ஏரித் தண்ணீரில் தத்தளிப்பதாக மீட்புக் குழுவினருக்குத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, நீருக்கடியில் தேடும் சிறப்புக் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்த ஏரியில் நடத்தப்பட்ட தேடுதலின் முடிவில் துரதிர்ஷ்டவசமாக சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் நடந்த ஸ்வான்ஹோல்ம் ஏரி ஒரு இயற்கை பாதுகாப்புப் பகுதியாகும் மற்றும் இது தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு அறிவியல் ஆர்வமுள்ள இடமாகும் (SSSI).

சம்பவத்தன்று லிங்கன் நகரில் வெப்பநிலை சுமார் 25°Cஆக பதிவாகியிருந்தது. ஒட்டுமொத்தமாக இங்கிலாந்தில் அன்றைய தினம் 79 ஆண்டுகளில் இல்லாத அளவாக இலண்டனின் ஹீத்ரோ பகுதியில் 32°C வெப்பநிலை பதிவாகியது.

லிங்கன்ஷையர் பொலிஸார் இச்சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். இது டெக்லனின் நண்பர்களையும் உள்ளூர் சமூகத்தையும் பெரிதும் பாதிக்கும் என்று கூறியுள்ள பொலிஸார், பாடசாலை விடுமுறை காலம் (half-term week) தொடங்குவதால், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளையும் ஆதரவையும் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்களில் இருந்து வரும் தகவல்களைச் சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்றும் பொலிஸார், பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.