Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா சமூக ஊடகங்கள் மூலம் இந்தோனேசியர்களை சட்டவிரோதமாக அனுப்பி வந்த மலேசியர் கைது

சமூக ஊடகங்கள் மூலம் இந்தோனேசியர்களை சட்டவிரோதமாக அனுப்பி வந்த மலேசியர் கைது

1 minutes read

சமூக ஊடகங்கள் மூலம் மலேசியாவில் வீட்டு வேலை எனக் கூறி இந்தோனேசியர்களை சட்டவிரோதமாக வேலைக்கு வழங்கி வந்த மலேசிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நபர் சட்டவிரோதமாக இந்தோனேசிய தொழிலாளர்களை மலேசியாவுக்கு அனுப்பும் வேலையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகின்றது.

“இந்த சந்தேக நபருக்கு இந்தோனேசிய தொழிலாளர்களை வேலைக்கு தேர்வு செய்ய அனுமதியில்லை,” எனத் தெரிவித்துள்ளார் Riau தீவு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் வீட்டுவேலை வாங்கித்தருவதாகக் கூறி சட்டவிரோதமான முறையில் இந்தோனேசியர்களை மலேசியாவுக்கு அனுப்பும் செயலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அந்நபரிடமிருந்த கடவுச்சீட்டுகள், பயணச் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இக்கைது, சட்டவிரோதமாக இந்தோனேசிய தொழிலாளர்களை கடத்தும் செயலைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய நகர்வு எனத் தெரிவித்திருக்கிறார் Riau தீவு குற்ற விசாரணை காவல்துறையின் ஆணையர் ஏரியி டர்மண்டோ.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More