ஆஸ்கார் அல்பெர்டோ என்பவர், எல் சால்வடார் நாட்டை அகதி தனது இரண்டு வயது மகளுடன் புகலிடம் தேடிப் பயணம் செய்தபோது, ஆறு ஒன்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தனது மகளுடன் ஆற்றில் மூழ்கி அவர், உயிரிழந்த காட்சி உலகை உலுக்கியுள்ளது.
கடந்த ஞாயற்றுக் கிழமை நடந்த இந்த சம்பவத்தின் புகைப்படம் தற்போது வெளியாகி உலகையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் நிலவும் சமூக பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக ஏராளமான மக்கள் அகதிகளாக அமெரிக்க செல்கின்றனர்.
இதேபோல், அமெரிக்காவுக்கு அகதியாக செல்ல முயற்சித்த ஆஸ்கார் அல்பெர்டோ குடும்பத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், மெக்ஸிகோவில் உள்ள ரியோ கிராண்டே ஆற்றைக் கடந்து செல்லும் ஆபத்தான பயணத்தை ஆஸ்கார் மேற்கொண்டிருக்கிறார்.
இதன்போது ஆஸ்கார் அல்பெர்டோ தனது மகளுடன் மூழ்கி உயிரிழந்தார். மகளை காப்பாற்ற முயற்சித்து அந்த பிஞ்சு குழந்தையுடன் ஆஸ்கார் கரை ஒதுங்கிய புகைப்படம் உலகை உலுக்கியிருக்கிறது.