முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக .முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். யோகேஸ்வரன் கவிர்சன் (18) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
முள்ளியவளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை பகல் 2 மணியளவில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.
சிறு வயது முதல் தந்தை இன்றி தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து முல்லைதீவு பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.