ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முள்ளுத்தேங்காய் செய்கையை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு இன்று அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
காலி – உடுகம பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் இன்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
முள்ளுத்தேங்காய் செய்கை தொடர்பில் வினைதிறன் மிக்க சூழல் ஆய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுமாயின் முள்ளுத்தேங்காய் செய்கையில் கிடைக்கும் இலாபத்தை பொருட்படுத்தக்கூடாது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.