நாட்டின் பிரதான குற்றவாளிகளும் ஊழல்வாதிகளுமே இன்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளனர். தேசிய மற்றும் சர்வதேச சதிகள் நாட்டிற்கு எதிராக இடம்பெறுவதாக கூறி நாட்டினை சர்வதேசத்திற்கு விற்கும் நடவடிக்கையை ராஜபக்ஷக்கள் முன்னெடுத்து வருகின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சரத் பொன்சேகா கூறுகின்றார்.
ராஜபக்ஷக்களின் அரசாங்கதை வீழ்த்தும் சக்தி தேசிய மக்கள் சக்தியிடமே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் ஒன்று இன்று தொம்பே பிரதேசத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் கூறினார்.