Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் காலமானார்

மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் காலமானார்

0 minutes read

மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கி வந்த மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை, (80 வயது) சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) காலை, அவர் உயிரிழந்ததாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் திருச்சிலுவை கண்ணியர் மருதமடு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று காலை 6.30 மணியளவில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவரது இறுதி கிரியைகள் தொடர்பாக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படுமென குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More