Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பசில் ராஜபக்ஷவுக்கு பயணத்தடை நீக்கம்

பசில் ராஜபக்ஷவுக்கு பயணத்தடை நீக்கம்

1 minutes read

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு 2023 ஜனவரி 15ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவின் பிரதிவாதிகளில் ஒருவராக பசில் ராஜபக்ஷ பெயரிடப்பட்டுள்ள வழக்கில் முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டு நீடிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், பசில் ராஜபக்‌ஷ அடுத்த வாரம் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்காகவும், சில தனிப்பட்ட விடயங்களை மேற்கொள்ளவும் எதிர்பார்ப்பதாக, அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றிற்கு அறிவித்ததைத் தொடர்ந்து உயர் நீதிமன்றம் இவ்வனுமதி வழங்கியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More