ரயில் நிலையத்துக்கு அருகில் நேற்று காலை ரயில் கடவையில் களனிவெளி ரயில் மார்க்கத்தில் பகிரிவத்தை மற்றும் தெல்கந்த கார் ஒன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியது. தம்பதியினரை ஏற்றிச் சென்ற காரை ரயில் மோதி ஏற்பட்ட இவ்விபத்தில் காரில் பயணித்த பெண் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
பகிரிவத்த ரயில் நிலையத்துக்கு அருகில் வசிக்கும் அந்த தம்பதியினர் நேற்று (21) அதிகாலை திம்புலாகல பகுதிக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய போதே இந்த விபத்துக்கு முகம் கொடுத்துள்ளனர்.
அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலே பங்கிரிவத்த ரயில் கடவைக்கு அருகில் காரை மோதியுள்ளது.