விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளரும் காலிமுகத்திடல் போராட்டத்தின் ஏற்பாட்டாளருமான வசந்த முதலிகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராகக் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட மூன்று வழக்குகளிலும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்தப் பிணை உத்தரவு வழங்கப்பட்டது என்று சட்டத்தரணி நுவான் போப்பகே தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த வசந்த முதலிகே, அந்த வழக்கிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நிலுவையிலிருந்த மேலும் 3 வழக்குகளில் வசந்த முதலிகேவுக்கு இன்று பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.