தந்தை ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளையும் வெட்டிப் படுகொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இந்தச் சோக சம்பவம் கேகாலை மாவட்டத்துக்குட்பட்ட மாவனல்லை – அரநாயக்கவில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
33 வயதான குடும்பஸ்தரும், அவரின் இரண்டு பிள்ளைகளான 6 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுவர்களுமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.