செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

1 minutes read

நீங்கள் தந்தது வெறும் காகிதம் அல்ல என்பது எமக்கு தெரியும் இதனை எனது உள்ளத்தால் ஏற்கின்றேன் நான் உறுதி மொழிதரமுடியாது ஆனால் என்னால் உங்களின்துன்ப துயரங்களை அறிவோம் உங்கள் பிரச்சினைகளை என்னால் முடிந்தவரையும் ஐ.நா சபையிலும், மனித உரிமைகளை பேணம் நாடுகளிடமும் உங்கள் பிரச்சினையை எடுத்து கூறுவோம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் துதுவர் கார்மென் தலையையிலான குழுவினர் எடுத்ரைத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுடிருக்கும் ஐரோப்பியொன்றிய துதுகுழுவினர் இன்று புதன்கிழமை செம்மணி மனித புதைகுழி அகழ்ஆய்வு இடத்திற்கு நேரில் விஜயம் செய்து அங்கு இடம்பெற்றுவரும் அகழ்வு பணிகளை பார்வையிட்டதுடன் களத்தில் கடமையாற்றிவரும் யாழ் நிதிமன்ற நிதிபதி,யாழ் போதனாவைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி மற்றும் சட்டதரணிகளிடம் கலந்துலையாடினார்கள்.

இதன்போது ஐரோப்பிய துதுக்குழுவினரின் வருகைகையின் போது தமக்கு சர்வதேச நிதிவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் முன்னேடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இருவரை உள்ளே அழைத்து கலந்துரையாடியபோதே ஐரோப்பிய துதுக்குழுவினர் இந்த விடயத்தினை தெரிவித்தார்கள் என வடக்கு பிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கதலைவி இதனை தெரிவித்தார். இதே வேளை குறித்த ஆர்பாட்டத்தில் பொலிசார் உறவுகளை வீடியோ எடுத்ததுடன் நக்கல்,நையாண்டிகள்களுடன் மக்களை ஒடுக்கியும் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டிருந்தார்கள்.

இப்போரட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், அரசரார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.