செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பஸில் வீட்டு நிகழ்வைப் புறக்கணித்த ராஜபக்ச குடும்பம்!

பஸில் வீட்டு நிகழ்வைப் புறக்கணித்த ராஜபக்ச குடும்பம்!

1 minutes read

முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பஸில் ராஜபக்சவின் வீட்டில் நடைபெற்ற நிகழ்வை ராஜபக்ச குடும்பம் கூண்டோடு புறக்கணித்துள்ளது.

இது தொடர்பில் தெற்கு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

ராஜபக்ச குடும்பத்துக்குள் பிரச்சினைகள் இருப்பது அவ்வப்போது வெளியாகத்தான் செய்கின்றன. அவற்றுள் ஒன்று கடந்த வாரம் வெளியானது.

பத்திரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலுக்கு அருகில் அமைந்துள்ள பசில் ராஜபக்சவின் வீட்டில் பௌத்த சமய நிகழ்வொன்று டிசம்பர் 31 ஆம் திகதி இடம்பெற்றது.

அதற்கு ராஜபக்ச குடும்பத்தவர்கள் அனைவரையும் பஸில் அழைத்திருந்தார். ஆனால், யாரும் கலந்துகொள்ளவில்லை என்பதுதான் கவலையான விடயம்.

மஹிந்த, சமல், நாமல், சசீந்திர என யாரையும் அங்கு காண முடியவில்லை.

பொதுவாக, மஹிந்தவின் வீட்டிலும் சமலின் வீட்டிலும் அடிக்கடி இந்த நிகழ்வு இடம்பெறுவதுண்டு. அதில் ராஜபக்ச குடும்பத்தவர்கள் தவறாமல் கலந்துகொள்வது வழமை.

ஆனால், தனது வீட்டு நிகழ்வைத்தான் அவர்கள் புறக்கணித்துவிட்டார்கள் என்று புலம்புகின்றாராம் பஸில். அவர்கள் மட்டுமல்ல எம்.பிக்கள்கூட அப்படித்தான். 10 அல்லது 12 பேரைத்தான் அங்கு காண முடிந்தது – என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More