இலங்கையின் சுதந்திர தினமான இன்று தமிழர்களுக்கான கரிநாளாகப் பிரகடனம் செய்து, “தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை” என்னும் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை நிலைநிறுத்தக் கோரி, யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிப் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக முன்றலில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமான பேரணியில், பல்கலைகழக சமூகத்தினர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், அரசியல் கைதிகளின் உறவுகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பக்கேற்றுள்ளனர்.