செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ். வன்முறை: 26 பெண்கள் உட்பட 31 பேர் கைது!

யாழ். வன்முறை: 26 பெண்கள் உட்பட 31 பேர் கைது!

1 minutes read

யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தூர் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பில் 31 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண்களின் காணொளிகளைக் கணினியின் ஊடாக செம்மையாக்கம் செய்து சமூக ஊடங்களில் பதிவேற்றிய சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்களைச் சந்தேகித்து குறித்த பகுதியைச் சேர்ந்த 50 இற்கும் அதிகமானோர் நேற்றுமுன்தினம் இரவு இரண்டு இளைஞர்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். வீட்டில் இருந்த பொருட்களையும் தீயிட்டுக் கொளுத்தினர்.

இதன்போது, தாக்குதல்களுக்குள்ளான இரண்டு இளைஞர்களையும் வைத்தியசாலையில் சிகிச்கைகளுக்காக சேர்க்க முற்பட்ட போது மீண்டும் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸாரால் வான் நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது.

சம்பவத்தின் போது, காயமடைந்த பொலிஸ் உப பரிசோதகரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

கைதானவர்களில் 25 பெண்களும், 6 ஆண்களும் அடங்குகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More