அமைதியான மேற்கு லண்டன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட நபர் தொடர்பான விவரங்களை பெருநகர பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
54 வயதான ஜேசன் தாம்சன், செவ்வாயன்று அதிகாலை 4.33 மணியளவில் மெலினா க்ளோஸ், ஹேய்ஸில் உள்ள தனது வீட்டின் உள்ளே கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு காயம் அடைந்தார்.
மருத்துவ உதவியாளர்கள் மற்றும் முதலுதவி சேவை வழங்கப்பட்ட போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து, 30 வயதுடைய நபர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்பட்டுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.