செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் பெண்களிடம் தவறாக நடந்த நபர் தீ வைத்ததில் 11 பேர் உயிரிழப்பு

பெண்களிடம் தவறாக நடந்த நபர் தீ வைத்ததில் 11 பேர் உயிரிழப்பு

1 minutes read

மெக்சிகோவில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதற்காக மதுபான கூடத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நபர் ஆத்திரத்தில் தீ வைத்ததில் 11 பேர் பலியாகியுள்ளனர்.

மெக்சிகோவின் சொனோரா என்ற மாகாணத்தில் சான் லூயிஸ் ரியோ கொலராடோ நகரில் உள்ள மதுபான கூடத்தில் கடந்த வெள்ளி கிழமை இரவு ஆண்கள், பெண்கள் என கும்பலாக கூடி, கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, ஒரு நபர் பாரில் இருந்த சில பெண்களிடம் தவறாக நடந்து கொண்டார் என கூறப்படுகிறது. இதுபற்றி அறிய வந்ததும் பாரில் இருந்த ஊழியர்கள் அந்த நபரை வெளியேற்றினர்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர், பின்னர் மீண்டும் திரும்பி வந்து அந்த பாருக்கு தீ வைத்து உள்ளார். இந்த சம்பவத்தில் பாரின் உள்ளே இருந்த பலர் சிக்கி கொண்டனர்.

தீயில் சிக்கியும், கடும் புகையாலும் 11 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 7 பேர் ஆண்கள். 4 பேர் பெண்கள் ஆவர்.

இதுதவிர, காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபரை அடையாளம் காணும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு உள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More