செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா இமாசல பிரதேசத்தில் கனமழை; சரிந்து விழும் வீடுகள்!

இமாசல பிரதேசத்தில் கனமழை; சரிந்து விழும் வீடுகள்!

0 minutes read

இந்தியா-இமாசல பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சிம்லா, மண்டி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 60 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், சிம்லா, மண்டி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்கள் சரிந்து விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லும் காட்சி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (என்டிஆர்எப்), மாநில பேரிடர் மீட்புப் படையினர் (எஸ்டிஆர்எப்), இராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் நிலச்சரிவினால் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாநிலத்தில் பருவமழை தொடங்கிய கடந்த ஜூன் 24 முதல் ஒகஸ்ட் 14 வரை மொத்தம் ரூ.7,171 கோடி (இந்திய ரூபா மதிப்பில்) மதிப்பில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

சுமார் 9,600இற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More