புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து: ஐந்து பேர் பலி

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து: ஐந்து பேர் பலி

0 minutes read

நேபாளத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த ஹெலிகாப்டர் மலைமீது மோதி விபத்துக்குள்ளான நிலையில், அதில் இருந்த 4 ஆண்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் நான்கு பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்றும், விமானி நேபாளத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மலைப்பாங்கான சூர்யாசார் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதுடன், மீட்புப் பணிகளுக்கு 2 ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காத்மண்டு விமான நிலையத்திலிருந்து சென்ற ஹெலிகாப்டர், புறப்பட்ட 3 நிமிடத்திலேயே தொடர்பை இழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More