பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் கோட்டபாய ராஜபக்ஷவை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டத்தரணி அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை குற்றவியல் விசாரணைத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்தென அஜித் பிரசன்ன சுட்டிக்காட்டியுள்ளார். ஆனாலும் இந்த முயற்சிகளை நாம் முறியடிப்போம் என அவர் உறுதியளித்துள்ளார்.