செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாகவர் ஸ்டோரி ‘எல்.ஐ.கே’ படத்தில் ஏதோ ஒன்று பொருந்தவில்லை | விக்னேஷ் சிவன்

‘எல்.ஐ.கே’ படத்தில் ஏதோ ஒன்று பொருந்தவில்லை | விக்னேஷ் சிவன்

1 minutes read

’எல்.ஐ.கே’ படத்தில் ஏதோ ஒன்று சரியாகப் பொருந்தவில்லை. ஏதோ ஒன்று கைகூடவில்லை என்று இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘எல்.ஐ.கே’. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. பிரதீப் ரங்கநாதன் நடித்த படங்கள் தொடர்ச்சியாக 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வந்தன. ஆனால், அவரது நடிப்பில் 100 கோடி வசூலைத் தாண்டாத முதல் படமாக ‘எல்.ஐ.கே’ அமைந்தது.

தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது ‘எல்.ஐ.கே’. வசூல், விமர்சனங்கள் உள்ளிட்டவை குறித்து பெரிய பதிவொன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். அப்பதிவில், “நான் ஒரு கனவுடன் வந்தேன், சிறியதல்ல, பாதுகாப்பானதும் அல்ல, நம்பிக்கையின் புயல். இந்தக் கதை கோடிக்கணக்கில் எதிரொலிக்கும்.

திரையரங்கின் சுவர்களை அதிர வைக்கும் என்ற நம்பிக்கை நான் கைதட்டலைக் கற்பனை செய்தேன், அதைத் திரையரங்குகளில் கண்டேன். நான் சிரிப்பை வரவழைத்தேன், அதைத் திரையரங்குகளில் கேட்டேன். ஆனால் இன்னமும் 100 கோடி என்ற மைல்கல்லைத் தொடவில்லை. உண்மையைச் சொல்லப்போனால், அதைவிட இருமடங்கு வசூலை கற்பனை செய்திருந்தேன். ஆனால் இன்னமும் எங்கோ, ஏதோ ஒன்று சரியாகப் பொருந்தவில்லை. ஏதோ ஒன்று கைகூடவில்லை.

இறுதி முடிவைப் பற்றி சற்று வருத்தமாக இருந்தாலும். நான் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கிறேன், ஏனென்றால் முன்பே குறிப்பிட்டது போல, இந்தப் படம் வெளியாவதே எனக்கு ஒரு பிளாக்பஸ்டர். என் தொலைபேசி பலமுறை ஒலிக்கும் என்று எதிர்பார்த்தேன், பாராட்டுக்களைப் பெற, நான் போற்றிய குரல்களிடமிருந்து, நான் மதித்த மனங்களிடமிருந்து.

ஆனால் யதார்த்தம், அது வேறு ஒரு குரலைத் தேர்ந்தெடுத்தது கலவையான வார்த்தைகள், அளவான புன்னகைகள், புகழை விட உரத்த கேள்விகள் இருந்தும், இதோ நான் நிற்கிறேன். உடைந்து போகவில்லை, உலுக்கப்படவில்லை, ஆனால் பெருமிதம், ஆழ்ந்த பெருமிதம். ஏனென்றால் இந்தப் படத்திற்குப் பின்னால, யாரும் காணாத போராட்டங்கள் இருந்தன. தூக்கமில்லாத இரவுகள், மவுனமான அச்சங்கள் மற்றும் என்னால் மட்டுமே உணர முடிந்த ஆயிரம் தடைகள் கடவுளுக்கு மட்டுமே தெரியும். இங்கு வந்து சேர என்னவெல்லாம் தேவைப்பட்டது என்று எழுபது கோடிக்கும் மேல் வசூல் மிகப்பெரியதல்ல, மிகப் பெரியதல்ல.

ஆனால் உண்மையானது, மற்றும் உழைத்துச் சம்பாதித்தது அதில் நாற்பது சந்தேகத்திற்குப் பிறகு வந்தது, தயக்கத்திற்குப் பிறகு ‘சராசரி’ என்ற சொல் அதைச் சுற்றிப் புழக்கத்திற்கு வந்த பிறகு அது. அதுதான் காதல். திரையரங்குகளுக்குள் நுழைந்த காதல், சத்தத்தையும் மீறி விமர்சனங்களையும் தாண்டி நம்பிய காதல். ஆகவே என் நன்றியுணர்வு முடிவற்றது. உங்கள் நீண்ட தனிப்பட்ட செய்திகள், விரிவான பாராட்டுகளும் விமர்சனங்களும் கூட! நான் கற்றுக்கொள்கிறேன்… தொடர்ந்து கற்றுக்கொண்டே இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

நன்றி : இந்து தமிழ் திசை

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.