செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு இங்கிலாந்து பாடசாலைகளுக்கு கத்திகளை கொண்டு செல்லும் மாணவர்கள்: விசாரணையில் அதிர்ச்சி!

இங்கிலாந்து பாடசாலைகளுக்கு கத்திகளை கொண்டு செல்லும் மாணவர்கள்: விசாரணையில் அதிர்ச்சி!

1 minutes read

இங்கிலாந்து பாடசாலைகளுக்கு சிறிய குழந்தைகள்கூட கத்திகளை கொண்டு செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக பிபிசி அறிக்கையிட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள பாடசாலைகளில் கடந்த 2024ஆம் ஆண்டு கத்திகள் அல்லது கூர்மையான பொருள்கள் சம்பந்தப்பட்ட 1,304 குற்றங்கள் பதிவாகியுள்ளன.

இவற்றில் குறைந்தபட்சம் 10% குற்றங்கள் ஆரம்பப் பள்ளி வயதுடைய குழந்தைகளால் செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.

4 வயதுடைய மாணவர் சம்பந்தப்பட்ட கத்தித் தாக்குதல் சம்பவத்தை கென்ட் பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.

அத்துடன், வெஸ்ட் மிட்லாண்ட்ஸில் 6 வயதுடைய மாணவர் ஒருவர் பிளிக் கத்தியுடன் (flick knife) சிக்கினார். மாணவர் ஒருவரைக் கொல்லத் தனக்குத் திட்டம் இருப்பதாக ஊழியர்களிடம் அவர் கூறியுள்ளார்.

அதேபோல், 5 வயதுடைய மாணவர் ஒருவர் 10 அங்குல சமையலறை கத்தியை “நண்பர்களுக்குக் காட்டுவதற்காக” பள்ளிக்கு எடுத்துச் சென்றார்.

6 வயதுடைய மற்றொரு மாணவர் “இறைச்சி வெட்டும் கத்தியுடன்” (meat cleaver) பள்ளிக்குச் சென்றுள்ளார்.

மேலும், கத்தி எடுத்துச் செல்லும் சில பதின்ம வயதினர், “தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவை” இருப்பதாக உணர்ந்ததாக பிபிசி அறிக்கையிட்டுள்ளது.

இதேவேளை, ஷெஃபீல்டில் சக மாணவரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட ஹார்வி வில்கூஸின் தாய், கரோலின் வில்கூஸ், இந்தத் தரவுகளை அதிர்ச்சியளிப்பதாகக் கூறுகிறார்.

எனவே, இங்கிலாந்தின் அனைத்துப் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளில் அரசு நிதி மூலம் மெட்டல் டிடெக்டர்களை (knife arches) நிறுவ வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸ் பகுதியில் கத்தி வன்முறையின் விகிதம் அதிகமாக இருப்பதால், ஒரு கல்வி அறக்கட்டளை தனது 4 இடைநிலைப் பள்ளிகளிலும் நிரந்தர உலோகத்தைக் கண்டறியும் “நைஃப் ஆர்ச்களை” நிறுவி வருகிறது.

2024 மார்ச் – 2025 மார்ச்க்கு இடையில் பாடசாலைகளுக்கான ‘நைஃப் ஆர்ச்’ விற்பனை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக மெட்டல் டிடெக்டர் விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கத்தி வன்முறைக்கான அடிப்படைக் காரணங்களைக் கையாள்வதில் கவனம் செலுத்துவதாக இங்கிலாந்து அரசாங்கம் கூறியுள்ளதுடன், தேவைப்படும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த பாடசாலைகளுக்கு அதிகாரம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More