Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் அடிக்கடி கை கால்கள் விறைத்து போகிறதா

அடிக்கடி கை கால்கள் விறைத்து போகிறதா

3 minutes read

அதிகமானோரை அடிக்கடி தாக்கும் நோய்களில் ஒன்று தான் அடிக்கடி கை கால்கள் விறைத்து போவது, நரம்பு இழுத்துக் கொள்வது, கை கால் உளைச்சல், வலி போன்றவை. கஷ்டப் பட்டு வேலைபார்க்கும் அன்சிவருக்கும் சாதாரணமாக இருக்கும் ஒன்று தான் இது.

உடலில் உள்ள உறுப்புகள் மரத்து போவது என்பது நோய் அல்ல இருப்பினும் நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்று சொல்லலாம். குறிப்பாக நம் உடலில் எங்கயாவது மரத்து போனால் அது நம் மூளை, முதுகுத்தண்டு வடத்தில் ஏதேனும் பிரச்சனை என்ற அறிகுறியாகும்.

அதுவே நம் உடலில் இரண்டு கால்களும் மரத்து போனால் அது சர்க்கரை நோய்களுக்கான அறிகுறியாகும். அதாவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது என்ற அறிகுறியாகும்.

அதுவே ஒருவருக்கு பல ஆண்டுகளாக இந்த மரத்துப்போதல் பிரச்சனை இருந்தால் அது மரபு அணுக்களின் கோளாறாக கூட இருக்கலாம்.

அதேபோல் ஏதேனும் ஆன்டிபயாடிக் மாத்திரை மற்றும் புற்று நோயை குணப்படுத்தும் மாத்திரை என்று தொடர்ந்து நீங்கள் மாத்திரை எடுத்து கொண்டிருந்தாலும் கை, கால்கள் அடிக்கடி மரத்து போகும் பிரச்சனை ஏற்படும்.

மேலும் தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பிகள் குறைந்தாலும் இந்த கை, கால்கள் மரத்து போகும் பிரச்சனை ஏற்படும்.

உடல் எடை அதிகரித்து உடலில் அதிகளவு கொழுப்புகள் சேர்ந்தாலும் இந்த மரத்து போகும் பிரச்சனை ஏற்படுகிறது.
இந்த மரத்து போகும் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிசைகளை முறையாக அளித்தாலே இந்த மரத்து போகும் பிரச்சனையை சரி செய்துவிட முடியும்.

வைட்டமின் B12 குறைபாடுகள் இருந்தாலும் இந்த கை கால் மரத்து போகும் பிரச்சனை ஏற்படும், எனவே உடலுக்கு தேவையான அளவிற்கு வைட்டமின் B12 நிறைந்துள்ள உணவுகளை உட்கொள்ளவும்.

அதேபோல் தொழுநோயால் பாதிக்கப்பட்டரர்களுக்கும் இந்த கை, கால் மரத்து போகும் பிரச்சனை ஏற்படும். தொழு நோய் உள்ளவர்கள் மீது சூடான தண்ணீரை ஊற்றினால் கூட அவர்களுக்கு உணர்ச்சிகள் இருக்காது.

எனவே தொழு நோய் உள்ளவர்கள் தங்களது தோலை பரிசோதனை செய்து அதற்கான சிகிச்சை முறைகளை கடைபிடிக்கவும்.

சர்க்கரை நோயாளிகள் அவர்களது கை, கால்கள் மரத்து போகாமல் இருக்க வேண்டும் என்றால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக இவர்களுக்கு கால்களில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் அவர்களது நரம்புகளுக்கு அதிகளவு பாதிக்கப்படும்.

குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு கை கால்கள் அடிக்கடி மரத்து போனால் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்ற அறிகுறியாகும்.

சிலருக்கு தலை ஒரு பக்கம் மட்டும் மரத்து போய்விடும் அது பக்கவாதத்திற்கான அறிகுறிகள் ஆகும். எனவே அவர்கள் நரம்பியல் மருத்துவரிடம் சென்று தகுந்த சிகிச்சை பெற வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

உணரும் திறன் குறைவாக இருப்பதால் நடக்கும்போது அடி எடுத்து வைக்கும் போது தரையில் கால் படாத உணர்வு ஏற்படும்.இந்த சூழ்நிலையில் விழுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.மரத்துபோன நிலையில் நடக்க முயற்சிக்க கூடாது. சரியானபிறகே நடக்க வேண்டும்.

திடீரென உடல் மரத்துப்போய் செயலிழந்து போனால் அசைக்க முடியாது சூழ்நிலை ஏற்பட்டால் உடனடியாக அவசர சிகிச்சை மேற்கொள்ளுவது கட்டாயம்.
தடுமாறும் நிலைக்கு ஆழனாலும் அல்லது தலை கழுத்து முள்ளந்தண்டில் அடிபடுவதைத் தொடர்ந்து மறத்துப் போகுதல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டாலும். மருத்துவரை சந்திப்பது அவசியம்.

திடீர் என அசைக்க முடியாத நிலைக்கு போனாலும், மருத்துவரை பார்க்க வேண்டும்.
பதட்டமான சூழ்நிலையில் மலம் வந்தாலும் கட்டுபடுத்த முடியாத நிலைக்கு போய்விடுவீர்கள்.
நினைவு தடுமாற்றம் திடீரென மயக்கம், போன்ற அறிகுறிகள் இருந்தாலுகூடமருத்துவரை பார்பது கட்டாயம்.
பார்வைக் குறைபாடு ஏற்பட்டாலும், குறந்த பட்சம் மரத்துப் போன இடங்களை கைகலால் தேய்த்து விடலாம்.இயல்பானதாக இருந்தால் சரியாகிவிடும் இல்லை என்றால் தீவிரமாகும்.

இன்று இதற்கான இலகு தீர்வை தான் பார்க்கப் போகின்றோம். இதற்கு தேவையான பொருட்கள் உப்பு மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் என்று சொல்லப் படுகின்ற வினாகிரி. இவற்றை பயன்படுத்தி எப்படி மறுத்துவத்தை செய்வது என பார்க்கலாம்.

முதலில் தண்ணீரை கொதிக்க வைத்து பிளாஷ்டிக் பேஷன் ஒன்றில் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஆப்பிள் சீடர் வினிகர் மூன்று தேக்கரண்டி விடவும். நன்றாக மிக்ஸ் செய்த பின் அதில் உப்பு மூன்று கரண்டி வரை போட்டு மிக்ஸ் செய்யுங்கள்.. நன்றாக உப்பு கரைந்ததும்.

தண்ணீர் வெதுவெதுப்பான பதத்தில் இருக்கிறதா என பாருங்கள்..இப்போது இரண்டு கைகளையும் நீரில் வைத்து வைத்து எடுங்கள். அதே போல் கால்களையும் வைத்து எடுங்கள். இப்படி வாரம் இரண்டு முறை செய்தால் போதுமானது.. இரத்த ஓட்டங்கள் சீராவதுடன் கை கால் வலி உளைச்சல், நரம்பு இழுத்துக் கொள்ளுதல் , போன்றவை குணமாகிவிடும்..ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்…!!

பாதம், கை மற்றும் கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருந்தால்?

சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.

நன்றி தினசரி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More