கொழும்பு: இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக இலங்கை அரசின் ஆதரவாளர்கள் கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் பொம்மையையும் எரித்தனர்.
தேசிய அமைப்பின் சம்மேளனத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட கூடாது என்றும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் பொம்மையையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர்