0
சோமாலிய கடற்கொள்ளயர்களினால் கடத்தப்பட்ட இரண்டு இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளதாக இலங்கை விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு இலங்கையைச் சேர்ந்த ஆறு பேர் சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்டனர்.
ஆறு பேரில் இருவர் இன்று நாடு திரும்பியுள்ளதுடன் ஏனைய நான்கு பேர் தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.