சமீப காலங்களாக பல ஊடகங்களிலும் தனது எழுத்துக்கள் மூலம் பங்களிப்பினை செய்துவரும் எழுத்தாளர் நிவேதா உதயராயன் அவர்கள் எழுதிய இரு நூல்களான “நிறம் மாறும் உறவு” மற்றும் “வரலாற்றைத் தொலைத்த தமிழர்” எனும் மோசபத்தேமியாவில் இருந்து ஈழம் வரையான வரலாற்று ஆய்வு நூலும் கடந்த வாரம் லண்டனில் வெளியிடப்பட்டுள்ளது.
கவிஞர் ராஜமனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இரு நூல்களையும் இதழியலாளர் பத்மநாப ஐயர் வெளியிட்டு வைத்தார். சிறுகதைகள் பற்றி திரு முல்லை அமுதன், திரு யமுனா ராஜேந்திரன், திரு சாம் பிரதீபன் ஆகியோர் விமர்சனத்தையும் மொசப்பத்தேமியவிலிருந்து ஈழம்வரை என்கிற நூலுக்கு மாதவி சிவசீலன் அவர்களும் விமர்சனத்தை முன்வைத்தனர்.
மேற்படி ஆசிரியரின் மோசபத்தேமியாவில் இருந்து ஈழம் வரையான வரலாற்று ஆய்வு “சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்?” எனும் தலைப்பில் வணக்கம் லண்டன் இணையத்தில் விபரணக் கட்டுரையாக வெளிவருவது குறிப்பிடத்தக்கது.