Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இந்தியாவில் பெண் மருத்துவரை பாலியல் வல்லுறவு செய்து எரித்துக் கொலை

இந்தியாவில் பெண் மருத்துவரை பாலியல் வல்லுறவு செய்து எரித்துக் கொலை

1 minutes read

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவராக 27 வயதான பிரியங்கா ரெட்டி பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 27 ஆம் திகதி தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிள் பஞ்சராகியுள்ளது.

சாத்நகர் எனும் பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் நின்றிருந்த பிரியங்கா ரெட்டிக்கு உதவி செய்வதாகக் கூறி லொறியில் பயணித்த நால்வர் கடத்திச் சென்றுள்ளனர். இதன்போது, அவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, கொடூரமாக எரித்துக் கொலை செய்துள்ளனர்.

இந்த கொலைச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொலிஸார் நால்வரைக் கைது செய்துள்ளனர். அவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதியளித்துள்ளார்.

இதையடுத்து, சந்தேகநபர்கள் நால்வரும் சந்சல்குடா மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More