ரஷ்ய இராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு உக்ரைன் அரசும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி இன்றுடன் 14 நாட்கள் ஆகிறது. இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்துள்ளனர். போரை நிறுத்தும்படி அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், ரஷ்ய இராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 61 மருத்துவமனைகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக உக்ரைன் சுகாதாரத்துறை அமைச்சர் விக்டர் லியாஷ்கோ தெரிவித்துள்ளார்.